Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தாம்பரம்: சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ஏரியில் வட மாநிலம் பாட்னாவை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட சையேந்தர் (29) என்பவர் ஏரியில் நடு ஆழத்துக்கு சென்று அங்குள்ள ஆகாய தாமரையில் சிக்கிக்கொண்டதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தாம்பரம் குரோம்பேட்டை தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இடுப்பில் கயிறுகளை கட்டிக்கொண்டு நடு ஆழத்திற்கு சென்ற அந்த வாலிபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து அவரை குளிக்க வைத்து புதிய ஆடைகளை அணிவித்து சிட்லபாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அங்கு உடனடியாக வந்த தீயணைப்பு துறை வீரர்கள் வாலிபரை காப்பாற்றி குளிக்க வைத்து ஆடை அணிவித்ததை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களின் சேவையை வெகுவாக பாராட்டினர். மேலும் இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.